கேரளாவில் மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது; முதல்வர் பினராய் விஜயன் தகவல்>

கேரளாவில் மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது; முதல்வர் பினராய் விஜயன் தகவல்

 

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

கேரளாவில் இன்று மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த தலா மூன்று பேருக்கும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவிட் 19 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கேரளாவில் 52 ஆக உயர்ந்துள்ளது. காசர்கோட்டில் நோய் உறுதி செய்யப்பட்ட ஐந்து பேர் காசர்கோடு அரசு பொது மருத்துவமனையிலும் ஒருவர் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கண்ணூர் மாவட்டத்தில் நோய் உறுதி செய்யப்பட்டு அதில் இரண்டு பேர் தலசேரி அரசு மருத்துவமனையிலும் ஒருவர் கண்ணூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எர்ணாகுளம் மாவட்டத்தில் நோய் உறுதி செய்யப்பட்ட 3 பேரும் எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கேரளாவில் இதுவரை 53, 013 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 52, 785 பேர் வீடுகளிலும், 228 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர் சனிக்கிழமை மட்டும் 70 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்


 



Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி CNA சாலையில் கால்வாய் தூர்வாரும் பணி
Image
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்
Image
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
Image